நண்பனின் இழப்பு
நான் பெரும்பாலும் பொது வெளியில் பல தினங்களுக்கு வாழ்த்து கூறுவதையோ ,சொந்த சுக துக்கங்களை பகிர்வதையோ தவிர்பதுண்டு, ஆனால் இன்று எழுதும் இதை பகிரத்தான்போகிறேன் . இது என் நண்பனின் இழப்பு என் தந்தையின் இறப்பு .
அப்பா இது நீங்க எனக்கு என்னவாக இருந்திங்க நான் உங்களுக்கு என்னவா இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன் எல்லாமும் தான். அப்பா இது ரொம்ப செயற்கை தனமாக இருந்தாலும் உங்ககிட்ட சொல்லாததை திரும்பவும் சொல்கிறேன் " you are my hero "
நான் பிறக்கறப்போ உங்களுக்கு கிட்டத்தட்ட 36 வயசு . ரொம்ப வருஷமா அடுத்த பிள்ளை வேண்டாம் என்று இருந்து பிறகு பெற்ற பிள்ளை . நான் உங்க தாத்தாவை தொட்டு கூட பேசுனது இல்ல ஆனா நீ என்ன இப்படி போட்டு வம்புக்கு இழுக்கிறனு சொல்லும் போது உங்களுக்கு அப்படி ஒரு கர்வம் இருக்கும் . நான் ஸ்கூலுக்கு போறதுக்குள்ள நீங்க 40 வயசை கடந்துடீங்க . எல்லாத்தையும் கணக்கு போட்டே பார்க்கிற என்னோட மனநிலைக்கு நான் நிலையா நிக்கறதுக்குள்ள அப்பாக்கு retirement வயசு வந்து விடும் இது அதுனு நிறைய யோசிச்சிருக்கன்,
உங்களுக்கு நான் சின்ன வயசில இருந்தப்ப என்ன எந்த வேலைக்கு கூட கூட்டிட்டு போனாலும் அது நல்லபடியா முடிஞ்சிரும்னு சொல்லுவீங்க நம்புனீங்க. அது சுத்தமா பொய் என பல தடவை சொல்லிருப்பேன் , பாத்திங்களா உங்கள முதல் தடவை என் வாழ்க்கையிலேயே நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன் 9 /10 /2020 . வீட்டுக்கு உங்கள பிண வண்டியில தான் கூட்டிட்டு வந்தேன் . இந்த தடவையும் நான் தான் right . பள்ளி காலங்கள்ல என்ன தெரிஞ்சவங்களுக்கு நான் எதோ பெரிய அறிவாளின்னு நினைச்சிருப்பாங்க , ஆனா history எக்ஸாம் நான் எழுத பயந்த அந்த இரவு புக்ஸ் தூக்கி வெச்சிட்டு வா என்று அந்த இரவு முழுக்க நீங்க என்னோடு கழிச்சது நினைவிருக்கு . எனக்கு அப்பாவை இழக்க நேரிட்டது பெரிய வலியா தெரியல ஆனா என் பேச்சு தொனி ல பேசாத என் இரவுகள்ல நான் என்ன நெனச்சிக்கிட்ருக்கேன் எனக்கு என்ன பிரச்சனை என துல்லியமாக புரிந்து கொள்ள முடிஞ்ச ஒரே உறவையும் இழந்துட்டேன் அப்பா . அதான் வலிக்குது, நீங்களும் நானும் முரண் பட்டது என் விருப்பத்துக்கு மாறா என்னை மருத்துவம் படிக்க கட்டாயப்படுத்திய அந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் .
ஒவ்வொரு வாழ்க்கை தருணத்தையும் நீங்க பல விதத்துல எனக்கு உணர்த்திருக்கிங்க, உங்க இறப்பை பற்றியும் நாம் பேசிருக்கோம் . நம்ம ரெண்டு பேருக்குமே சாவு பக்கத்தில் வந்து போனதுதான் . பேசாமல் இருந்திருப்போமா என்ன .யாருக்கு நான் என்ன செய்ய வேண்டும் உங்கள் கடைசி நிமிடங்களை நான் எவ்வாறு கொண்டு செல்லணும்னு பல விஷயங்கள் . உங்கள் பலம் பலவீனம் ரெண்டுமே உங்க உறவுகள் தான் . சுயமரியாதையை இழக்குறிங்க என்று நான் கோவப்பட்டேன் உறவுகளை இழக்கிறேன் என்று நீங்கள் கவலைப்பட்டீர்கள் . அந்த கவலையே உங்களை விழுங்கியதோ என்னவோ ,appa take my words again THEY DIDNT DESERVE ALL THAT and YOU DIDNT DESERVE THIS EITHER. LOOK AT US NOW. இப்போ யார் யாரோ என்ன வேணும்னாலும் பேசலாம் ஆனா எங்களுக்கு நீங்க இல்ல . அம்மா எப்படி பா நீங்க இல்லாம இருப்பாங்க . என்னால பார்க்க கூட முடியலை தினமும் . பட்டன் கட்டி தராத சட்டை அப்படியே இருக்கு , வம்படியா எடுத்து வெச்சிக்கிட்ட என் சட்டையும் வேஷ்டியும் உங்க பீரோல அப்படியே இருக்கு . நீ வாழ்க்கைல ரொம்ப கஷ்டத்தையே பார்க்கிற இது நிச்சயம் மாறும்னு சொன்னிங்க இனி எது மாறினாலும் நீங்க இல்ல . "உன் கிளினிக்ல நான் டோக்கன் கொடுக்கிறேன் டா, என்னால ஒட்டிட்டே இருக்க முடியல "- இனிமே இது கண்டிப்பா நடக்காது , ஆனா நீங்க நினைச்ச மாதிரி ஒரு வேலை நான் உயர்ந்தால் மருத்துவமனை பெயர் என்னனு எனக்கு தெரியும் பா NS MEMORIAL HOSPITAL.
இதை எழுதிருக்க வேண்டாம் தான் .ஆனா உங்க இறப்பில் ,நண்பனின் நண்பனாக இருந்து இன்று உற்ற நட்பு போல பழகுகின்ற நண்பன் சொன்ன அந்த சில வார்த்தைகள் நம்பிக்கை தந்து சென்றது. இதுவும் யாருக்கேனும் எதோ ஒரு வகையில் எதோ ஒன்றை உணர்த்த உதவட்டும் . உங்ககிட்ட நிறைய பேசிருக்கணும் , உடன் இருந்திருக்கணும் . எதுவுமே செய்யல . 9/10 விடியற்காலை 4 மணிக்கு CATH LABla என் விழிகளில் தேங்கி இருந்த பயமும் உங்க நெத்தியில் நான் குடுத்த அந்த கடைசி ஒற்றை முத்தமும் கொஞ்சமேனும் உங்களுக்கு சொல்லிருக்கலாம் , DEI THAGAPPA AM MISSING YOU TERRIBLY EACH PASSING DAY .